Skip to content

மினாராவின் குரல்

290.00

ஆசிரியர்: மஹதி

ஐம்பது¸ அறுபது¸ எழுபதுகளில் இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் கதை¸ கட்டுரை¸ புதினம் என எழுதிக் குவித்த மஹதி (இயற்பெயர் சையத் அஹமத்) “முதுபெரும் எழுத்தாளர்” என்று பாராட்டப்பட்டவர்.

இஸ்லாமியரின் நாகரிகம்¸ பண்பாடு ஆகியவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும் முஸ்லிம்களிடையே வந்து புகுந்த அனாச்சாரங்கள்¸ மூடநம்பிக்கைகளைக் களைவதும் அவரது எழுத்தின் நோக்கமாக இருந்தது.

மஹதியின் அன்னையார் அஸீஸா பேகம் ஆற்காட்டு நவாப் முகமதலியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிக்கோ அப்துல் ரகுமான் இவருடைய புதல்வராவார்.

இஸ்லாத்தின் பெருமையையும் முஸ்லிம்களின் சாதனைகளையும் விளக்கும் முதுப்பெரும் எழுத்தாளர் மஹதியின் கட்டுரைகளின் தொகுப்பே “மினராவின் குரல் என்னும” இந்நூல்.